Tuesday, December 27, 2011

கடல் பாதுகாப்பு கருவி (EPIRB)




           மிகச் சமீபத்தில் இக்கருவி பற்றி சென்னையில் திரைப்பட உதவி இயக்குனராகப் பணியாற்றும் ஒரு நண்பர் கூறியதன் விளைவாக, நான் இந்த வீடியோ பதிவை தேட நேர்ந்தது. இது நமது மீனவ சகோதரர்களுக்கு அவசியம் பயன்படும் என்கிற நோக்கத்தில் வெளியிட்டுள்ளேன். 

                           மேலை நாடுகளில் உள்ள மீனவர்கள் அறிவியல் சார்ந்த சாதனங்களைக்   கொண்டு மீன் பிடித்தும், கடல் சீற்றம், புயல் ஆகிய காலங்களில் தப்பித்தும் வாழ்கின்றனர். ஏனோ, தமிழன் என்கிற ஒரே காரணத்தால் மீனவ இனம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. இது இன்று நேற்றல்ல, வெள்ளையர்கள் என்று சென்னையைப பிடித்தனரோ அன்றே இது ஆரம்பம் என்பது ஜே.பாலன் எழுதியுள்ள புத்தகம் மூலம் நாம் அறியலாம்.